ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்த அதர்வாவை பாலாவின் பரதேசி படத்தில் நடித்த பிறகுதான் கோடம்பாக்கம் உற்று நோக்கியது. சரியான கதைக்களம் கிடைத்தால் இவரையும் மோல்டு பண்ணி மாஸ் ஹீரோவாக்கி விடலாம் என்று சில இயக்குனர்களுக்கு நம்பிக்கை துளிர் விட்டது. அதனால், சூடு பறக்க சில கதைகளை மட்டுமே ஓ.கே செய்து சுறுசுறுப்பாக நடிக்கத் தொடங்கினார் அதர்வா.
அப்படி அவர் நடித்த படங்களில் இரும்புக்குதிரை நொண்டிக்குதிரையாகி அதர்வாவின் மார்க்கெட்டை அதள பாதாளத்தில் தள்ளி விட்டு விட்டது. இதன்காரணமாக, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த அதர்வாவின் மார்க்கெட்டும், சம்பளமும் மீண்டும் பின்னோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. என்றாலும் கவலைப்படவில்லை அதர்வா. சினிமாவில் இதெல்லாம் சர்வசாதாரணம் என்பது சினிமா குடும்பத்தில் இருந்து வந்துள்ள அவருக்கு தெரியாதா என்ன? அதனால் அதைப்பற்றியெல்லாம் இப்போது அவர் கலங்கவில்லை.
மாறாக, இந்த தோல்வியை தொடர விடாமல், உடனடியாக ஹிட் கொடுத்து சரிவில் இருந்து மீண்டு விட வேண்டும் என்று அடுத்தகட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர், இப்போது நடித்து வரும் ஈட்டி, கணிதன், சற்குணம் இயக்கும் படங்களில் அதே எனர்ஜிடிக் நடிகராக நடித்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம், கமர்சியல் விசயங்களுக்காக மெனக்கெடத் தொடங்கி விட்ட அதர்வா, இந்த படங்கள் வெளியாகும்போது நல்லவிதமாக படங்களை ப்ரமோட் பண்ணுங்கள் என்று ஒவ்வொரு படதயாரிப்பாளரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு வருகிறார். இதற்கு அவரது தயாரிப்பாளர்களும் கைகொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறர்களாம். இதனால் புதிய நம்பிக்கையுடன் காணப்படுகிறார் அதர்வா.