'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் டாப்சி, தற்போது அக்ஷ்ய் குமாருடன் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷ்ய் குமாரை தொடர்ந்து இப்போது இர்பான் கான் உடன் நடிக்க இருக்கிறார். ப்ரியா மிஸ்ரா இயக்கும் சுந்தர்காண்ட் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்சி. உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை காதல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதுகுறித்து டாப்சி கூறியுள்ளதாவது, பேபி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்தப்படத்திற்கு பிறகு சுந்தர்காண்ட் என்ற படத்தின் கதையை கேட்டேன். மிகவும் அற்புதமான கதை, இதுவரை இப்படி ஒரு கதையிலும், இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்தது இல்லை என்று கூறியுள்ளார்.
ப்ரியா மிஸ்ராவுக்கு இதுவே முதல்படம். ஏற்கனவே டிவி சேனலில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் சுந்தர்காண்ட் படத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காதலிப்பது போன்ற கதை. வழக்கமான காதல் கதையாக இப்படம் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது.