ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளிவந்த அமரகாவியம் படத்தில் நடித்துள்ள சத்யாவின் சொந்த பெயர் ஷாகீர். சினிமாவுக்காக சத்யா என்று மாற்றியுள்ளார். பெயரை மாற்றி வைத்தது அண்ணன் ஆர்யாதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எனது சொந்த பெயர் ஷாகீர். ஆனால் என் பெயரை எல்லோரும் தப்பாகத்தான் உச்சரிப்பார்கள். சினிமாவுக்கு நடிக்க வரும்போது எல்லோருக்கும் பிடித்த பெயராக இருக்க வேண்டும் என்பது அண்ணன் ஆசை. அவன்கூட தன் பெயரை சத்யா என்று வைத்துக்கொள்ளத்தான் விரும்பினான். அவனுக்கு பிடித்த படம் கமல் சார் நடித்த சத்யா படம். அதனால் அந்த பெயரை விரும்பினான்.
ஆனால் இயக்குனர் ஜீவா சார் உள்ளம் கேட்குமே படத்தில் அண்ணனை அறிமுகப்படுத்தியபோது ஆர்யா என்று வைத்து விட்டார். எனவே நான் சினிமாவுக்கு வந்ததும் என் பெயரை சத்யா என்று வைத்து விட்டான். நான் சினிமாவுக்கு வருவது ஆரம்பத்தில் அண்ணனுக்கு பிடிக்கவில்லை காரணம், அவனது முதல் படம் வெளிவரவே 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் கண்டிப்பாக வந்து ஜெயிப்பேன் என்று நான் உறுதி அளித்ததும் சம்மதித்தான்.
அவனைப்போலவே எனக்கும் ஆரம்பகாலத்தில் படங்கள் சொதப்பியது. இதற்கு முன் நான் நடித்த சில படங்கள் தவறாக போனது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதைப் பற்றி இப்போது பேசிப் பயனில்லை. அமரகாவியம் எனக்கு நல்ல வழியை காட்டி உள்ளது. இனி சினிமாவில் கவனமாக நடப்பேன் என்கிறார் சத்யா.