'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைக்கு வெற்றிகரமான இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவா டி.இமான். ஆனால் அவர் இசை அமைக்கும் படங்களின் பாடல்களில் ஒன்றிரண்டாவது பழைய பாடல்களின் சாயலில் அமைந்திருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. இதுகுறித்து இமான் கூறியிருப்பதாவது: முந்தைய பாடல்களின் சாயல் புது பாடல்களில் இருப்பது தவிர்க்க முடியாதது. எந்த பாடலையும் இன்ஸ்பிரேஷனாவோ ஒரு மாடலாகவோ எடுத்துக் கொண்டு பாட்டு போடுவது தவறல்ல. இது உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான். ஒரு பல்லவியையோ, பின்னணி இசையையோ அப்படியே காப்பி அடிப்பது தவறானது.
ஒரு இசை அமைப்பாளனோ, ஒரு நல்ல இயக்குனரோ அப்படி செய்வதில்லை. இன்றைக்கு இணைய தளம் கிராமத்திற்கும் சென்று விட்ட நிலையில் காப்பி அடித்தால் அடுத்த நிமிடமே குட்டு வெளிப்பட்டு விடும். ஆனால் சில இயக்குனர்கள் எத்தனை மெட்டு போட்டுக் கொடுத்தாலும் அதில் திருப்தி அடையாமல் இதே மாதிரி ஒரு பாட்டு போட்டு கொடுங்கள் என்று சீடியை நீட்டும்போது அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இசை அமைப்பாளருக்கு வந்து விடுகிறது.
இதனால் பாடல் வெளியீட்டிற்குப் பிறகு அந்த இசை அமைப்பாளர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இசை அமைக்கச் சொன்ன இயக்குனர் தப்பித்து விடுகிறார். ரீமிக்ஸ், காப்பி இரண்டுமே அடுத்தவர் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவது மாதிரிதான். என்கிறார் இமான்.