சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் தேவிப்ரியா. தற்போது நடித்து வரும் பாசமலர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களிலும் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். ஆனால் இனி வில்லியாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நிறைய சீரியல்களில் வில்லியாகவே நடித்து விட்டேன். என் நடிப்புக்காக பாராட்டுகள் கிடைத்தாலும் சீரியலை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளும் தாய்மார்களிடம் நான் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நானும் எத்தனை ஆண்டுகள்தான் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அதனால்தான் இனி வில்லி வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்தேன். இடையில் நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறேன். கத்துக்குட்டி, விஞ்ஞானி படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் தேவிப்ரியா.