டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவானவர்கள்தான் சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள். அந்த வரிசையில் இப்போது நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவும் ஹீரோவாகி விட்டார். அவர்களெல்லாம் பல வருடங்களாக வில்லன்களாக நடித்து அதன்பிறகுதான் ஹீரோ ஆனார்கள்.
ஆனால், சிம்ஹாவோ, சில படங்களில் நடித்ததுமே ஹீரோவாகி விட்டார். அப்படி அவர் ஹீரோ ஆனதற்கு முதல் காரணம் ஜிகர்தண்டாதான். அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் சித்தார்த் என்றாலும், வில்லனாக நடித்த சிம்ஹாவுக்கே மொத்த பாராட்டும் சென்றதும். அவரைச்சுற்றியே படத்தின் மொத்த கதையையும் பின்னப்பட்டிருந்ததால், இப்போது எத்தனை வெயிட்டான வேடங்களிலும் அவர் நடிப்பார் என்ற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
அதன்காரணமாக, தில்லுமுல்லு பத்ரி இயக்கியுள்ள ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கருணாகரன் ஹீரோவாக நடித்தபோதும், பாபி சிம்ஹாவை இன்னொரு ஹீரோவாக்கியுள்ளார். அவரைப்பார்த்து இப்போது தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கிய பரத்பாலா தான் இயக்கும் புதிய படத்திற்கு பாபி சிம்ஹாவையே ஹீரோவாக்கியிருக்கிறார். ஆக இந்த படத்தில் சிங்கிள் ஹீரோவாக அரிதாரம பூசவுள்ள சிம்ஹாவுக்கு பொருத்தமான கதாநாயகியை தேடும் அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் பரத்பாலா.