'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விஷால் மீண்டும் அவரது இயக்கத்தில் இப்போது பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். முந்தைய படத்தில் நடிகராக மட்டுமே இருந்த விஷால், நான் சிகப்பு மனிதன் படத்தில் இருந்து தயாரிப்பாளராகவும் ஆனார். தற்போது நடித்து வரும் பூஜை படத்திலும் விஷால் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதனால், மற்ற படங்களில் நடிப்பதை விட இந்த படத்தில் விறுவிறுப்பாக நடிக்கும் விஷால், துளி நேரத்தையும் செலவிடாமல் நடித்து வருகிறாராம்.
மேலும், சமீபகாலமாக தான் எந்த வெளியூர்களுக்கு சென்றாலும் அங்கு ஏதாவது புதிய படங்களில் திருட்டு விசிடிக்கள் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் விஷால் சம்பந்தப்பட்டவர்களை போலீசில் ஒப்படைத்தும் வருகிறார். அதோடு, தனது நடிப்பில் அடுத்து வெளியாகும் பூஜை படம் திரைக்கு வரும்போதும் திருட்டு விசிடி விற்பவர்களை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைக்கவும் ஒரு ரசிகர் படையை உருவாக்கப்போகிறாராம்.
இதுபற்றி விஷால் கூறுகையில், ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் நாங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அதன்பிறகு படத்தை வெளியிட்டால், படம் தியேட்டருக்கு வரும்போதே திருட்டு விசிடியும் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து விடுகிறது. அதனால்தான் அநியாயத்தைக்கண்டு சினிமாவில் கொந்தளிப்பது போன்று நிஜ வாழ்க்கையிலும் சினிமாக்காரர்களுககு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்ற ஆவேசம் ஏற்படுகிறது. அதனால் சில இடங்களில் தட்டிக்கேட்டேன். தவறு செய்தவர்களை போலீசில் பிடித்தும் கொடுத்தேன். ஆனால், இந்த திருட்டு விசிடியை சினிமாத்துறையினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் ஒரே மாதத்தில் எளிதாக ஒழித்து விடலாம் என்கிறார் விஷால்.