சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'ருத்ரமாதேவி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி முறையில் படமாக்கப்படும் முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. ககாத்தியா வம்சத்தின் தெலுங்கு ராணியான ருத்ரம்மா தேவியின் வாழ்க்கையைச் சொல்லும் இப்படத்தில் ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றும் கிருஷ்ணம் ராஜு, பிரகாஷ் ராஜ், சுமன், நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, ஆகியோருடன் அல்லு அர்ஜுன் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தோட்டா தரணியின் பிரம்மாண்டமான கலை அமைப்பில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் பல பிரம்மாண்டமான அரங்குகள், கோயில்கள், அந்தக் கால நகரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. உடனுக்குடன் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவற்றிற்கான கிராபிக்ஸ் வேலைகளும் நடந்து வருகிறது. இளையராஜா இசையில் இனிமையான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவையும் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இவையனைத்தும் முடிந்து திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தமிழிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.