'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் சமீப காலமாக அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஹீரோவாக வலம் வருகிறார் சித்தார்த் மல்கோத்ரா. வெறும் 3 படங்கள் மட்டுமே நடித்திருந்த போதிலும் சித்தார்த், பல முன்னணி நடிகர்களான அமீர் கான், ஹிருத்திக் ரோஷன், ஃபரன் அக்தர், ரன்பீர் கபூர் போன்றோருக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார்.
சித்தார் மல்கோத்ரா, நித்ய மெஹ்ரா என்ற படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அமீர் கான், ஹிருத்திக் ரோஷன், ஃபரன் அக்தர், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி ஹீரோக்களின் பெயர்களே பரிசீலனை செய்யப்பட்டு வந்ததாம். ஆனால் தற்போது அவர்கள் யாரும் இல்லாமல், அப்படத்தில் நடிப்பதற்கு சித்தார்த் மல்கோத்ரா புக் செய்யப்பட்டுள்ளாராம். இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் ரித்திஷ் சித்வானி உறுதி செய்துள்ளார்.
இப்படத்திற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கரன் ஜோகர் கோ புரோட்யூசராக பணியாற்ற உள்ள இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ராவிற்கு ஜோடியாக நடிக்க போகும் ஹீரோயின் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.