‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தான் அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, அதையடுத்து, நடித்த இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுககு தாவினார். அதோடு, முதல் படத்திலேயே நயன்தாராவுடன்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அவர் கால்சீட் கிடைக்காததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினேன் என்றார்.
அதையடுத்து, நடிக்கயிருந்த நண்பேன்டா படத்திற்கு காஜல் அகர்வாலை புக் பண்ணினார். அதோடு, 40 லட்சத்தை அட்வான்சாகவும் கொடுத்தார். ஆனால், பின்னர் அவரிடம் பேசும்போது சம்பளத்தை உயர்த்தியதோடு, ஏடாகூடமாக பேசியதால் அவரை நண்பேன்டா படத்திலிருந்தே தூக்கினார் உதயநிதி.
இந்த நிலையில், தற்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் தன்னுடன் நடித்த நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நண்பேன்டா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. இதையடுத்து, காஜல்அகர்வாலை தொடர்பு கொண்டு அட்வான்சாக கொடுத்த 40 லட்சத்தை உதயநிதி தரப்பு கேட்டார்களாம்.
அதற்கு, அவரோ, வாங்கிய பணத்தை திருப்பி தரும் ஐடியா இல்லை. வேண்டுமானால் ஒரு படத்துக்கு புக் பண்ணுங்கள். அதில் இந்த அட்வான்சை கழித்துக்கொள்ளலாம் என்றாராம். இதனால் இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம் உதயநிதி.