இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மெகா படங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில், விஷாலுடன் பூஜை படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து விஜய்யுடன் சிம்புதேவன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். அதையடுத்தும் சில முன்னணி ஹீரோ படங்களில் ஸ்ருதியை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு மெகா படத்தில் இருந்து நான் நீககப்பட்டுள்ளேன் என்று டுவிட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ருதி. அவர் மெகா படம் என்றதும் அது விஜய் படமாகத்தான் இருக்குமோ என்று மீடியாக்கள் யூகித்து செய்திகள் வெளியிட்டன. ஆனால் இப்போது அந்த செய்தியை மறுத்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
நான் மெகா படம் என்று சொன்னது தெலுங்கில் ஆகடு படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவுடன் நடிக்கயிருந்த படம்தான். இப்போது ஆகடு படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடுகிறேன். இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கு என்னிடம் தான் கால்சீட் கேட்டிருந்தனர். ஆனால், அட்வான்ஸ் வாங்கும் கடைசி நேரத்தில் எனக்குப் பதிலாக தமன்னாவை புக் பண்ணியுள்ளனர். அதைத் தான் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தேன் என்று விளக்கமளித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.