ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றி இன்னும் எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், அவருடைய அடுத்த படம் பற்றிய பல்வேறு விதமான செய்திகள்தான் வந்த வண்ணம் உள்ளன. சிரஞ்சீவி, ராம் சரண், நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகியோர் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்து, அதன் பின் அவை எதுவுமே நடக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. தற்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் புதிதாக எந்த கதையையும் தயார் செய்து இயக்காமல், அவருடைய 1985 வெளியீடான 'மௌன ராகம்' படத்தைத்தான் மீண்டும் ரீமேக் செய்யப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 'மௌன ராகம்' படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷமான படங்களில் ஒன்று. இளையராஜாவின் இசையும், கார்த்திக்கின் துறுதுறுப்பான நடிப்பும், மோகனின் அமைதியான நடிப்பும், ரேவதியில் இயல்பான நடிப்பும் என அந்தக் காலத்தில் மிகவும் பாராட்டப்பட்ட படம். படம் வெளியான போது சிறப்பான ஓபனிங் இல்லையென்றாலும் அதன் பின் படம் பற்றிய பேச்சு அதிகமாகி அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இன்றும் அந்தப் படத்தில் இடம் பெற்ற இளையராஜாவின் இனிமையான பாடல்களை ரசிகர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மோகன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இப்போது ரேவதி கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இன்னும் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்க முடியாமலே இருக்கிறார் நித்யா மேனன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அது நிறைவேற வாய்ப்புள்ளது.