தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானத்தை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி. சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது சிம்பு என்றாலும், சின்னத்திரையில் வளர்ந்தது லொள்ளு சபாவால்தான். அதிலும் குறிப்பாக அதன் இயக்குனர் முருகானந்தத்தால்தான்.
தற்போது முருகானந்தம் தில்லுக்கு துட்டு என்ற பெயரில் ஒரு படம் இயக்கக்போகிறார். இதில் நன்றி கடனுக்காக சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சந்தானம் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இதனால் இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டது. தற்போது வாலிபராஜா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வரும் சந்தானம் அடுத்து சோலோவாக நடிக்கும் படம் இது.
இதனை யுடிவி அல்லது பிவிபி சினிமாவுடன் இணைந்து சந்தானம் தயாரிக்க இருக்கிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. படம் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.