வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
இன்று காலை சென்னையில் நடைபெற்ற போக்கிரி மன்னன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு, அப்படத்தின் ஹீரோவாக நடித்துள்ள நடன மாஸ்டர் ஸ்ரீதரை வாழ்த்தினார் நடிகர் கருணாஸ். அதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அதன் விவரம் வருமாறு- எந்த தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மீட்டு விடலாம். ஆனால் சினிமா மட்டும் ஒரு உத்தரவாதமே இல்லாத தொழில். இன்றைக்கு சிறிய பட்ஜெட் படங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. வருடத்திற்கு 160 படங்கள் தயாராகிறது என்றால் 10 படங்கள் மட்டுமே பெரிய படங்களாக உள்ளன. மற்றபடி 150 படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள்.அவற்றின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நான் ரகளை புரம் என்ற படத்தை வெளியிட முடியாமல் ரொம்ப சிரமப்பட்டேன். அப்போது எனக்கு துணையாக தயாரிப்பாளர் தாணு மட்டுமே வந்தார். தயாரிப்பாளர் சங்கம் எனக்கு உதவி செய்யவில்லை. அதனால் என்னைப் போலவே சிறிய முதலீட்டில் படமெடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் படத்தை எடுத்து விட்டு அதை வெளியிடுவதற்கு படாதபாடு படுகிறார்கள். படங்களை வெளியிட சரியான சங்க அமைப்புகள் இல்லை.
அதனால் இந்த நிலையை மாற்றி, சிறிய படங்களை காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் முயற்சி செய்ய வேண்டும். அதன்காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்தை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். சிறிய படங்களை வெளியிட வழிவகை செய்ய வேண்டும். அந்த கூட்டமைப்பு மூலம் வெளியாகும் முதல் படம் இந்த போக்கிரி மன்னன் படமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.