இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தயாரிப்பாளராக இருந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அந்தப் படத்தின் வெற்றிக்கு சந்தானத்தின் நகைச்சுவையும் ஒரு முக்கிய காரணம்.
படம் முழுவதும் வரும்படியான ஒரு கதாபாத்திரம் அந்தப் படத்தில் சந்தானத்திற்காக அமைக்கப்பட்டது. அதே போல் உதயநிதி அடுத்து நடித்த 'இது கதிர்வேலன் காதல்' படத்திலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது 'நண்பேன்டா' படத்திலும் உதயநிதி, சந்தானம் ஒன்றாக நடித்து வருகிறார்கள். இருந்தாலும் உதயநிதி அடுத்து அகமது இயக்கத்தில் நடிக்க உள்ள 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சந்தானத்தை நீக்கி விட்டார்கள். அவருக்குப் பதிலாக நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறாராம்.
அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள இந்தப் படத்தில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு உதயநிதியுடன் ஹன்சிகா ஜோடியாக நடிக்க உள்ளார். முதலில் இந்தப் படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என அவரிடம் கேட்ட போது, ஏற்கெனவே எழுந்த வதந்தியால் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். நயன்தாரா வதந்தி விவகாரத்தில் உதயநிதிக்கும், சந்தானத்திற்கும் இடையே கூட பிரச்சனை எழுந்துள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள். இருவரும் படப்பிடிப்பில் பேசிக் கொள்வது கூட இல்லையாம்.
அதனால்தான் உதயநிதி, அவருடைய அடுத்த படத்தில சந்தானத்தை கழட்டி விட்டார் என்கிறார்கள். இவையெல்லாம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் சமீபத்தில் ஒரு பேட்டியையும் கொடுத்து அவர்கள் அனைவருமே ஒன்றாக நட்புடன் இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆக, தமிழ் சினிமா ராசிப்படி நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்தால் இறங்கு முகம்தான் என்பது சந்தானம் விஷயத்திலும் நடந்துவிட்டது.