ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஸ்ருதிஹாசன் சில தினங்களுக்கு முன் பதிவிட்ட ஒரு டுவிட்டர் செய்தி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. “சில விஷயங்கள் மாறிவிட்டன, எந்த பெரிய படங்களும் இல்லை, எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது, அவற்றை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என அவர் போட்ட ஒரு டுவிட்டரால்தான் அந்த பரபரப்பு நிலவியது. ரசிகர்கள் உடனே ஸ்ருதிஹாசன், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திலிருந்துதான் விலகிவிட்டார் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால், உடனடியாக 'நான் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கிறேன்' என்று மற்றொரு டுவிட்டரைப் போட்டு அந்த பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார், ஸ்ருதிஹாசன்.
ஆனால், அவர் அப்படி பதிவிட்டதன் காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக, கொரட்டலா சிவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டார்களாம். அதற்குக் காரணம் மகேஷ் பாபுதான் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் சமீபத்தில்தான் மகேஷ் பாபு நடிக்கும் 'ஆகாடு' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடினார். அப்படியிருக்கு அடுத்து நடிக்க உள்ள புதிய படத்திலிருந்து மகேஷ் பாபு அவரை திடீரென நீக்கியதற்கு பின்னணி ஒன்று உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஷ் பாபுவுக்கும் ஹீரோயின்களுக்கும் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். முன்னர் சமந்தா, அதன் பின் தமன்னா, இப்போது ஸ்ருதிஹாசன்.
மகேஷ் பாபு படத்திலிருந்து விலகியதைப் பற்றி விரைவில் ஸ்ருதிஹாசனே டுவிட்டுவார்...