'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு, அப்படத்தின் டிரைலரை டம்மியாய் ரெடி பண்ணினார் இயக்குநர் ஷங்கர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஐ டிரைலரை பார்க்க விரும்பி இருக்கிறார். தயாரிப்பாளரில் விருப்பத்தை அறிந்து ஐ படத்தின் டிரைலரை ஆஸ்கார் ரவிக்கு அனுப்பி வைத்தார் ஷங்கர்.
ஐ டிரைலரை பார்த்து மிரண்டுபோன ஆஸ்கார் ரவி, உடனே தனக்கு நெருக்கமான நண்பர்கள் பலரையும் தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து ஐ படத்தின் டிரைலரை போட்டுக்காட்டி இருக்கிறார். அதோடு, ஆர்வமிகுதியில் சில பத்திரிகையாளர்களையும் அழைத்து அவர்களுக்கும் ஐ டிரைலரை காட்டி இருக்கிறார். அடுத்த கட்டமாக, ஃபேஸ்புக்கில் புழங்குகிற சிலரை அழைத்தும் ஐ டிரைலரை போட்டுக்காட்ட, அதில் யாரோ ஒருவர் ஆஸ்கார் ரவிக்கு தெரியாமலே அதை செல்போனில் பதிவு செய்து அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர்.
திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட டிரைலர் துல்லியமாக இல்லாவிட்டாலும், விக்ரம் பல தோற்றங்களில் வருவது அதில் நன்றாகவே தெரிகிறது. இந்த விஷயம் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் காதுக்கு வர கடும் கோபமாகிவிட்டதோடு, அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.