ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள படம், மர்தானி. இந்த படத்தில் பெண் குழந்தை கடத்தலை தடுக்கும் அதிரடி பெண் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார்.
குழந்தை கடத்தலுக்கு எதிராக போலீசார் போராடுவதற்கு இந்த படம் ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தை அனைத்து போலீசாருக்கும் போட்டுக்காட்ட பீகாரின் போலீஸ் உயர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் காமன்வெல்த் மனித உரிமை கழகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பீகார் சி.ஐ.டி., அதிகாரிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மர்தானி படத்தின் நாயகி ஷிவானி ஒரு போலீசுக்கு உரிய அனைத்து தகுதிகளுடனும், நேர்மையானவராக இருப்பதால் இது போலீசார் அனைவருக்கும் முன்உதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், அவரது செயல்பாடுகள் வன்முறை உணர்வை தூண்டும் விதமாக உள்ளதால், அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குற்றவாளிகளுக்கு எதிராக வன்முறை போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வையும், திறமை என்ற பெயரில் என்கவுண்டரை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த படம் உள்ளது.
குற்றவாளிகளை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு உண்டு. மர்தானி படத்தில் போலீசாரை முரடர்கள் போன்று காட்டி இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படம் பற்றி நன்கு ஆய்வு செய்த பிறகே போலீசாருக்கு இதனை போட்டுக் காட்டுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.