டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இரண்டு ஆண்டுகளாக பெப்சி அமைப்பில் தலைவராக இருந்த டைரக்டர் அமீர் இப்போது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் படம் இயக்குவதில் இறங்க தயாராகி விட்டார். அதனால் மீண்டும் சினிமா விழாக்களுக்கு வரத் தொடங்கியிருக்கும் அமீர், நேற்று காலை சென்னையில் நடைபெற்ற திலகர் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், டைரக்டர்கள் சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சீனுராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்களில் கரு.பழனியப்பன் பேசும்போது, எந்த விழாவாக இருந்தாலும், விழா நடந்து கொண்டிருக்கும் போதுதான் அமீர் வருவார். ஆனால் இந்த விழாவுக்கு மட்டும் விழா ஆரம்பிக்கும் முன்பே வந்து விட்டார்.
நான் வீட்டில் இருந்து புறப்படும்போது அவருக்கு போன் செய்தேன். அப்போது நான் பங்சனுக்கு வந்துட்டேன் நீங்க இன்னும் வரலையா? என்று கேட்டார். அவர் அப்படி கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. என்னடா இது ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்கு என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன். இங்கு வந்த பிறகுதான் அவர் எதற்காக அதிகாலையிலேயே கிளம்பி வந்தார் என்பது எனக்கு புரிந்தது என்று சூசகமாக சொல்லி விட்டு அமர்ந்தார்.
அதையடுத்து பேசிய அமீர், கரு.பழனியப்பன் ஆரம்பித்த விசயத்தை உடைத்து விடும் வகையில் பேசினார். அதாவது, நான் விழாவுக்கு முதல் ஆளாக வந்த காரணம் நீது சந்திராதான் என்றார். யுத்தம் செய் படத்தில் என்னுடன் கன்னித்தீவு பொண்ணா என்ற பாடலில் நடனமாடியவர். 4 வருடங்களாக என்னுடன் நட்பாக இருக்கிறார். அதன்பிறகு நான் இயக்கிய ஆதிபகவன் படத்திலும் நடித்தார்.
இந்த விழாவுக்கு வந்திருக்கும் அவருக்கு அதில் சம்பந்தப்பட்ட யாரும் தெரியாது என்பதால், விழா நடைபெற்ற சத்யம் தியேட்டருக்கு முன்பே வந்து விட்டு எனக்கு போன் செய்தார். அதனால் அவருக்காக நானும் முதல் ஆளாக வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆக, நீதுசந்திராவுடனான நட்புதான் என்னை இழுத்து வந்தது என்பதை விழா மேடையில் தெரிவித்தார் அமீர்.