ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து தயாராகும் புதுப்படத்தில் பாஞ்சாலி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். ராஜ்நீதி படப்பிடிப்பின் போது இயக்குனர் பிரகாஷ் ஜாவும், நானா படேகரும் மோதிக் கொண்டனர் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களோ தாங்கள் இருவரும் எப்போதும் போல பரஸ்பரம் மரியாதையுடன் பழகி வருவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரகாஷ் ஜா தயாரிப்பில் நானா படேகர் படம் ஒன்றை இயக்குகிறார். மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு பாஞ்ச் பாண்டவ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அர்ச்சுனன் வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். யுதிஷ்டிரன் வேடத்தில் இர்பான் கான், சகுனி கதாபாத்திரத்தில் ஓம்புரி, நகுலனாக ரேஹான் கான் நடிக்கின்றனர். மகாபாரதத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் பாஞ்சாலி வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பீமன், மற்றும் சகாதேவன் வேடத்தில் நடிக்க பிரகாஷ் ஜா டீம், நடிகர்களை தேடிவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது.