தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அலிபாபா, கழுகு, யாமிருக்க பயமேன் உள்பட பல படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியான இவர், தற்போது யாட்சன் படத்தில் ஆர்யாவுடனும், வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் வன்மம் படத்தில் நடிக்க கதை கேட்டபோது, இதே படத்தில் இன்னொரு கேரக்டரில் நடிப்பது யார் எனறு கேட்டபோது, விஜயசேதுபதி என்றதும் அவரையும அறியாமல் பயம் பற்றிக்கொண்டதாம். காரணம், அவர் தன்னை விட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதனால், தன்னை இன்னொரு ஹீரோ என்று சொல்லி டம்மி பண்ணி விடுவார்களோ என்று பயந்து கொண்டே நடித்தாராம் கிருஷ்ணா. அதோடு, அவ்வப்போது டைரக்டர்களிடத்தில் என்னை டம்மி பண்ணி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேயிருநதாராம்.
அப்போது, எனக்கு ராதா, செல்லத்துரை என்ற இரண்டு கேரக்டர்களுமே இரண்டு கண்கள் மாதிரி என்று டைரக்டர் சொன்னாராம். அதற்கு இப்படி சொல்லி விட்டு படம் முடிகிறபோது ரெண்டு கண்ணில் ஒரு கண்ணை நொல்ல கண்ணாக்கி விடக்கூடாது என்று கூறினாராம். ஆனால் இப்போது படத்தைப்பார்த்தபோது விஜயசேதுபதிக்கு இணையான வேடம் கிருஷ்ணாவுக்கும் கொடுககப்பட்டுள்ளதாம்.
அதோடு, கதைப்படி அவருக்கு ஜோடி இல்லாதபோதும் இவருக்குத்தான் சுனைனா ஜோடியாம். இதை சொல்லி சந்தோசப்படும் கிருஷ்ணா, தன்னை விட அதிக படங்களில நடித்தவரான சுனைனாவும், விஜயசேதுபதியும் படப்பிடப்பில் தன்னிடம் எந்த ஈகோவும் இல்லாமல் பழகியதாகவும சொல்கிறார். மேலும், இதுவரை ஷோலோ ஹீரோவாக நடித்தபோது எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவும இருக்கிறார் என்றதும் ரொம்ப கஷ்டப்பட்டு போட்டி போட்டு நடித்தேன் என்கிறார்.