பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அந்த படத்தில், அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்று அப்பட நாயகியான ஸ்வாதியின் அழகை வர்ணித்து விஜய் பாடிய அப்பாடல் அந்த படம் வெளிவந்த நேரத்தில் ஹிட்டானது.
அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார், விஜய். ஏற்கனவே 5 பாடல்களை பதிவு செய்து கொடுத்து விட்ட இசையமைப்பாளர் அனிருத், விஜய் பாட வேணடிய நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். அதனால் சில நாட்களுக்கு முன்பே அவரிடம் டியூனை கொடுத்து பயிற்சி எடுக்க சொன்னவர். நேற்று அந்த பாடலையும் விஜய் பாட பதிவு செய்து விட்டார்.
செல்ப்பி புள்ள என்று தொடங்கும் பெப்பியான அந்த பாடலை ஒரே மணி நேரத்தில் பாடிக்கொடுத்தாராம் விஜய. கதைப்படி செல்ப்பி பிரியரான சமந்தாவை புகழும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கிறதாம். விஜய் பாடியுள்ள இந்த பாடலை மெகா ஹிட் பண்ணிவிட வேண்டும் என்று பாடலில் புதுமையான இசைக்கருவிகளை இணைத்து கலர்புல்லாக உருவாக்கியிருக்கிறாராம் அனிருத்.