ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார், இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹேமாமாலினி. தற்போது தனது தொகுதி தொடர்பான பிரச்னைகளை கவனித்து வருவதோடு, தொகுதி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு நடிகையாக, மனைவியாக, தாயாக சிறிது காலம் கடந்தது. என் வாழ்க்கை பயணத்தில் பல்வேறு முகங்கள் கடந்து சென்றுள்ளன, அவை எல்லாமே முக்கியமான ரோல். நான் எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். தொடர்ந்து ஒரு நடிகையாகவும், எம்பி.யாகவும் இருந்தாலும் என் குடும்பத்தின் மீது எப்போதும் கவனம் செலுத்துவேன், குடும்பத்தை விட்டு என்னால் இருக்க முடியாது. என் வாழ்க்கையின் காலைப்பொழுது உடற்பயிற்சி, யோகா மற்றும் பூஜையில் சென்று விடுகிறது. மீதம் இருக்கின்றன நேரத்தில் எனது குடும்பத்தையும், அரசியலையும் கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.