'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
ராஜபக்சேவின் நண்பர் தயாரிக்கும் படம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது - கத்தி படம். அதனால் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி ஒருபுறம் கத்தி படத்தை பதம் பார்த்துக்கொண்டிருக்க...அதைப் பற்றி கவலையேப்படாமல் எப்படியும் கத்தி படத்தை தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வந்தே தீருவது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஸியாக இயங்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டன. பேட்ச் ஒர்க் என்கிற சில ஷாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதோடு, அனிருத் தாமதப்படுத்தியதால் எடுக்காமல் தடைபோட்டுப்போன விஜய் கடைசியாகப் பாடிய பாடல் காட்சி மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. இன்னொரு பக்கம், கத்தி படத்திற்கான எடிட்டிங், டப்பிங் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கத்தி படத்தைப் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. தற்போது இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர். முருதாஸின் இந்த அறிவிப்பின் மூலம் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது.. ஆக... ஷங்கர் இயக்கும் ஐ படத்துடன் மோத முடிவு செய்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்!