ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் வினய். அதையடுத்து, பல படங்களில் நடித்த இவர் தற்போது டைரக்டர் சரணின் ஆயிரத்தில் இருவர், சுந்தர்.சியின் அரண்மனை ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே தலா 3 நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இதில், ஆயிரத்தில் இருவர் படத்தில் சாமுத்திரிகா, சுவாஸ்திகா, கேஷா என மூன்று புதுமுகங்களுடன் நடித்திருப்பவர், அரண்மனை படத்திலோ ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்ற முன்னணி நடிகைகளுடன் நடித்திருக்கிறார். இதனால் இந்த படங்களின் படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டில் எந்நேரமும் இந்த நடிகைகளுடன் அரட்டையடிப்பதையே முக்கிய வேலையாக செய்து கொண்டிருக்கிறாராம் வினய்.
இதுபற்றி வினய் கூறுகையில், ஒரு நடிகை நடித்தாலே அந்த நடிகையுடன் ஜாலி அரட்டையடிக்கும் எனக்கு இப்போது மூன்று நடிகைகள் இரண்டு படங்களிலுமே கிடைத்திருப்பதால் அவர்களிடம் ஒரே கலாட்டாதான் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார். அதிலும் அரண்மனை படத்தில் நடிக்கும் மூன்று நடிகைகளுமே அழகான நடிகைகள் அதுவும் எனக்கு பிடித்தமான நடிகைகள் என்பதால் எவ்வளவு அரட்டையடித்தாலும் எனக்கு போரடிக்கவே இல்லை என்று சொல்லும் வினய், இதன்காரணமாக நாங்கள் அரண்மனை படப்பிடிப்பு தளத்தில், அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பள்ளி குழந்தைகளை போல்தான் சுற்றித்திரிந்தோம். அதனால் எங்களை விரட்டி விரட்டி வேலை வாங்குவதற்குள் ரொம்ப கஷ்டப்பட்டார் டைரக்டர் சுந்தர்.சி என்கிறார்.