பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலகலப்பு, பீட்சா, சூதுகவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தவர் கருணாகரன். இதில் சூதுகவ்வும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்த கருணாகரனுக்கு காசு பணம் துட்டு என்ற பாடல் காட்சியிலும் நடித்தார். அதேபோல், யாமிருக்க பயமே படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார்.
விளைவு, இப்போது தில்லுமுல்லு படத்தை அடுத்து பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாகி விட்டார் கருணாகரன். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார் கருணாகரன். அவருக்கு ஜோடியாக அஞ்சாதே விஜயலட்சுமி நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது, அதில் கருணாகரன் கலந்து கொள்ளவில்லை. காரணம், தற்போது அவர் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சந்தானத்துடன் இவரும் இன்னொரு காமெடியனாக நடிக்கிறாராம்.
இந்தநிலையில், ஆடாம ஜெயிச்சோமடா தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாகரன் ஆசைப்பட்டாராம், ஆனால், லிங்கா படப்பிடிப்பு ஷிமோகா பகுதியில் பெய்து வரும் கன மழைக்கு நடுவே இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறதாம்.
அதனால் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட அனைவருமே அங்கு முகாமிட்டிருந்தால்தான் க்ளைமாக்ஸ் காட்சியை விரைவில் படமாக்க முடியும் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சொல்லி விட்டாராம். அதன்காரணமாகவே, தான் படப்பிடிப்புக்கு லீவு போட்டால் காம்பினேஷன் சீன் எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், தனது படத்தின் ஆடியோ விழாவில்கூட கலந்து கொள்ளாமல் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் கருணாகரன்.