இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 20-ந்தேதி நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்திற்காக ஆந்திராவுக்கு சென்று விட்டு திரும்பினார் களஞ்சியம். அப்போது அவர் வந்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் களஞ்சியம் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில், தற்போது மு.களஞ்சியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், நான் ரத்த காயத்துடன் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். என்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகூட எனக்கு தெரியாது. அப்போது ஒரு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. அதையடுத்து என்னை அங்கு கொண்டு சென்ற போலீசாருக்கும், அங்கிருந்த நர்சுகளுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. உடனே டாக்டர்களை வரச்சொல்லுஙக்ள் அப்போதுதான் இவரை காப்பாற்ற முடியும் என்று போலீசார் சொல்கிறார்கள். அப்போது என் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.
இப்படியாக அவர்களுக்கிடையே பிரச்னை நடந்து கொண்டிருந்தபோது, ஒருவர் போலீசாரிடம் வந்து, நான் ரோஜா எம்எல்ஏவிடமிருந்து வருகிறேன் என்று சொல்லி ஏதோ சொன்னார். பின்னர் ரோஜா மேடத்துக்கு போன் போட்டு கொடுத்து, போலீசாரிடம் பேச வைத்தார். அதையடுத்து, நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டோம்.
ஆனால், எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செய்த ரோஜா இதுவரை எந்த பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.