Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்டமாருதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்... சரத்குமார் பேட்டி!

01 செப், 2014 - 16:32 IST
எழுத்தின் அளவு:

சண்டமாருதம் படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சட்மன்ற உறுப்பினர், நடிகர் சங்கத் தலைவர், முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவர், தயாரிப்பாளர் இப்படி பன்முகங்களை கொண்ட சரத்குமார் சண்டமாருதம் படத்தின் மூலம் காதாசிரியராகவும் மாறியிருக்கிறார். இத்தனை பொறுப்புகள் வகித்தாலும் பொள்ளாச்சியில் மீரா நந்தனுடன் ஜாலியாக டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.


* எப்படி திடீர்னு கதாசிரியர் ஆயிட்டீங்க?


உங்களுக்கு தெரியாதா இன்னொரு சரத்குமார் இருக்கார். அவர் எழுத்தாளர் சரத்குமார். என்னோட வாழ்க்கையே பெங்களூர்ல ஒரு பத்திரிகையாளராத்தான் ஆரம்பிச்சுது. நிறைய கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன். நடிக்க வந்த பிறகு அதுக்கு நேரம் இல்லாம போச்சு. சண்டமாருதம் கதை பல வருஷம் என்னோட மனசுக்குள்ள இருந்தது. அதை இப்போ எடுத்து வெளியில விட்டுருக்கேன். எழுத்தாளர் ராஜேஷ்குமார் எனக்கு பிடித்த க்ரைம் எழுத்தாளர் என்னோட கதையும் க்ரைம்ங்றதால அவர்கிட்ட படிக்க கொடுத்து நீங்களே ஸ்கிரீன் ப்ளே, டயலாக் எழுதிக் கொடுத்திடுங்கன்னு கேட்டேன். கதையை படிச்சிட்டு இப்படி ஒரு விஷயம் எனக்கு தோணலையேன்னு ஆச்சர்யப்பட்டவர் மளமளன்னு எழுதிக் கொடுத்திட்டார். சண்டமாருதம் ரெடி.


* அப்படி என்ன இருக்கு சண்டமாருதத்தில்?


ஒவ்வொரு மனிதன் செயலுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு தாதா உருவாகியிருக்கான்னா அவன் பிறக்கும்போதே தாதா இல்லை. அவன் உருவாக்கப்படுகிறான். அவனுக்கும் மனசு இருக்கு, குடும்பம் இருக்கு. அந்த தாதாவை அழிக்கிற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டும் தானா பொறக்குறதில்லை போலீஸ் துறையால உருவாக்கப்படுகிறான். அவன் செய்றது என்கவுண்டரா இருந்தாலும் ஒரு வகையில அதுவும் கொலைதான். அந்த கொலை செய்ற அவனோட மனசு எப்படி இருக்கும். அவனோட குடும்பத்தார் மனசு எப்படி இருக்கும். இப்படி இருதுருவங்களோட செயல்பாட்டை சொல்லி அதன் பின்னணியும் காட்டுற படம்.


* இப்போ டவுள் ஆக்ஷன் சீசன். அதான் நீங்களும் அப்படியே...?


(கேள்வியை முடிப்பதற்குள்) நான் பண்ணாத டபுள் ஆக்ஷனா... அதெல்லாம் நிறைய பண்ணியாச்சு. இந்தப் படத்துல ரெண்டுமே பவர்வுல் கேரக்டர். ஒரு கேரக்டர்ல நான் நடிச்சிட்டு இன்னொரு கேரக்டருக்கு வேறொரு ஹீரோவ போட்டா அவரோட இமேஜுக்காக கதையில் சில காம்பரமைஸ்களை செய்ய வேண்டியது வரும். அதான் நானே ரெண்டு கேரக்டரையும் பண்றதுன்னு முடிவு பண்ணினேன்.


* வெங்கடேஷை இயக்குனரா எப்படி செலக்ட் பண்ணினீங்க?


கே.எஸ்.ரவிகுமாரும், ஏ.வெங்கடேசும்தான் என்னை வைத்து நிறைய படம் இயக்கி ஹிட் கொடுத்திருக்காங்க. ரெண்டு பேருமே என்னோட வேவ்லென்த்துக்கு சரியா இருப்பாங்க. ரவிகுமார் இப்போ சூப்பர் ஸ்டார் படத்தை பண்ணிக்கிட்டிருக்கார். அவரை தொந்தரவு செய்ய விரும்பல. அடுத்த சாய்ஸ் ஏ.வெங்கடேஷ். அவரும் நான் கற்பனையில வச்சிருந்த காட்சியை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வந்துகிட்டிருக்கார்.


* இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களே...?


இரண்டு ஹீரோக்கள் இருக்கும்போது இரண்டு ஹீரோயின்கள் தேவைதானே... ஆட்டம் பாட்டு, ரொமான்சை விட இரண்டு பேருக்குமே நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு.


* நிமிர்ந்து நில் படத்தில் நீங்க நடிச்சீங்க. உங்க படத்துல சமுத்திரகனி இது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்தானே...?


அப்படியெல்லாம் இல்லை. சமுத்திரகனி எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் எங்க நிறுவனத்தில்தானே அவர் டி.வி.சீரியல் இயக்கினார். அவர் படத்துல ஒரு கேரக்டருக்கு நான் தேவைப்பட்டேன் நடிச்சார். இந்தப் படத்துல ஒரு பவர்புல் போலீஸ் ஆபீசர் கேரக்டருக்கு அவர் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணினோம். அவர் நடிக்கிறார் அவ்ளோதான்.


* எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறீர்களே இளமையின் ரகசியம்தான் என்ன?


இதுல ஒரு ரகசியமும் இல்லை. அளவான சாப்பாடு, கண்டிப்பான உடற்பயிற்சி. ரிலாக்சான மனநிலை. இந்த மூணையும் கரெக்டா வச்சிக்கிட்டா போதும். வயதுங்றது நாம வாழ்ற ஆண்டுகளின் கணக்குதானே தவிர அதை உடம்போடு இணைத்து பார்க்க வேண்டியதே இல்லை.


* நடிகர் சங்கத்தில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கிறதே...?


நடிகர் சங்கம் ஒரு ஜனநாயக அமைப்பு. இதில் உறுப்பினராக உள்ள யார் வேண்டுமானாலும கேள்வி கேட்கலாம். பொறுப்புக்கு போட்டியிடலாம். அதனால் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தால்தான் அது ஜனநாயக அமைப்பாகவும் இருக்க முடியும்.


* நடிகர் சங்க இடப்பிரச்னை....?


அது கோர்ட்டில் வழக்காக உள்ளது. அதுபற்றி நிறைய பேச முடியாது. குறுகிய காலத்திற்குள் எல்லாம் நல்லபடியாக முடிந்து எங்கள் கனவுகள் நனவாகும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in