ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ந் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன் நாகேஸ்வரராவின் பெருமைகளை சொல்லி அவரது தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டு அமெரிக்க அஞ்சல்துறைக்கு கடிதம் எழுதியது.
அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அஞ்சல்துறை நாகேஸ்வரராவின் தபால்தலையை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளது. வருகிற 20ந் தேதி நியூயார்க்கில் நடைபெறும் நாகேஸ்வரராவின் பிறந்த நாளில் இந்த தபால்தலை வெளியிடப்படுகிறது என்று அக்கினேனி பவுண்டேஷன் அறிவித்துள்ளது.
"தகவல் அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். எனது தந்தைக்கு அமெரிக்கா அளித்துள்ள கவுரவத்திற்கு நன்றி" என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார் நாகேஸ்வரராவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனா.