பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒரு படத்தின் இடைவேளையின் போது பாடல் வைக்க மாட்டார். அப்படி வைத்தால் ரசிர்கள் எழுந்து போய்விடுவார்கள் என்பது அவரது எண்ணம். இதை முறியடிப்பதற்காக ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் இடைவேளையில் பாடல் வைத்திருக்கிறார் பத்ரி.
இது பற்றி அவர் கூறியதாவது: நான் இதற்கு முன் கே.பாலச்சந்தர் இயக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்தேன். அப்போது பாலச்சந்தர் சார் தினமும் போன் பண்ணி படம் பற்றி விசாரிப்பார். அப்படி விசாரிக்கும்போது ஒரு நாள் "ராகங்கள் பதினாரும் உருவான வரலாறு..." பாடலை எந்த இடத்தில் வைத்திருக்கிறாய் என்று கேட்டார். இடைவேளையின் போது வைத்திருக்கிறேன் என்றேன். "அதை உடனே மாற்றி வேறு இடத்தில் வை. இடைவேளையின் போது பாட்டு வைத்தால் எழுந்து வெளியே போய்விடுவார்கள்.
மதுரையில பிறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே... பெரிய ஹிட் பாடல்தான் ஆனால் அதை இடைவேளையில் வைத்ததால் யாரும் பார்க்க வில்லை" என்றார். தில்லு முல்லு அவர் கதை அதனால் அவர் சொல்வதை கேட்க வேண்டுமே என்று அப்போது மாற்றினேன்.
ஆடாம ஜெயிப்போமடா படத்தில் ஏன் அதை மாற்றிப் பார்ப்போமே என்று தோன்றியது. இடைவேளை நேரத்தில் "ஓடுற நதியை விடாமல் துரத்து..." என்ற பாடலை வைத்திருக்கிறேன். ரசிகர்ளுகக்கு பிடித்தால் எந்த இடத்தில் இருந்தாலும் ரசிப்பார்கள் என்பதை நிரூபிக்க வைத்துள்ளேன். இப்போது படத்தை பார்த்தவர்கள் அந்த பாடலை பாராட்டுகிறார்கள். படம் வெளிவந்த பிறகு ரசிகர்களும் பாராட்டுவார்கள் என்றார்.