மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பாபு, 81, சென்னையில், நேற்று மாரடைப்பால் காலமானார். தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவரின் பல படங்கள், தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.
இவர் கடைசியாக, ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தை இயக்கினார். அதில், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்துள்ளனர். இப்படம், தமிழிலும் வெளியானது.சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த பாபு, சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார்.நேற்று முன்தினம், மூச்சு திணறல் ஏற்பட்டதால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மாலை, மாரடைப்பால் இறந்தார். பாபுவின் மரண செய்தி அறிந்த தெலுங்கு பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பாபு.
பாபுவின் மகன் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்தவுடன் பாபுவின் இறுதிச்சடங்கு இன்று அல்லது நாளை நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.