'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாய்ஸ் சித்தார்த்து ப்ளேபாய் இமேஜிலிருந்து தன்னை முழுசுமாக மாற்றிக்கொள்ளும் தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அதனால் இத்தனை நாளும நடிகைகளை சுத்தியே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த அவர் ஜிகர்தண்டா படத்தில் முதன்முறையாக ஒரு ரவுடி கதையில் நடித்தார். அதோடு அந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால், இவருக்கு வரவேண்டிய பெயர் அனைத்தும் அப்படத்தின் வில்லன் சிம்ஹாவுக்கு போய் விட்டது.
அதனால் சித்தார்த்துக்கும் மனதளவில் வருத்தம்தான். அதன்காரணமாகவே இப்போது காவியத்தலைவன் படத்தில் ப்ருத்விராஜூடன் நடித்து வரும் சித்தார்த், ஒருவேளை இந்த படத்திலும் தன்னை விட ப்ருத்விராஜூக்கே பெயர் கிடைக்குமோ என்கிற சந்தேகம் வர, அவரே முந்திக்கொண்டு காவியத்தலைவனில் என்னைவிட ப்ருத்விராஜூக்குத்தான் ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும் என்று முன்மொழிந்து வருகிறார்.
இந்த நிலையில, அவர் எதிர்பார்க்கிற இன்னொரு முக்கியமான படம்தான் லூசியா. கன்னடத்தில் வெளியான இந்த படத்தைப்பார்த்த சித்தார்த், இதன் தமிழ் ரீமேக்கில் எப்படியும் நடித்து விட வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்கினார். அது ஒர்க்அவுட்டாகி விட்டது. இப்போது சி.வி.குமார் அந்த படத்தை தயாரிக்கிறார். அப்படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில நடிக்கிறார் சித்தார்த்.
மேலும், இந்த படத்திற்கு ஏற்கனவே ஒரு பரிட்சயமான டைட்டீலை வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று யோசித்தவர்கள், இப்போது கமல் நடித்த எனக்குள் ஒருவன் பட டைட்டீலை முறைப்படி வாங்கியிருக்கிறார்கள். அதனால் திரையுலகினரால் குட்டி கமல் என்றழைக்கப்பட்டு வரும் சித்தார்த், கமல் பட டைட்டீலே தனது படத்துக்கு கிடைத்திருப்பதால் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார். அதோடு, கமல் படத்தின் டைட்டீலில் நடிப்பது எனக்கு கிடைத்த பெருமை என்றும் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார்.