டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இப்போதும் நான் ராத்திரியில் தனியாக தூங்க பயப்படுவேன் என்கிறார் அரண்மனை என்ற பேய் படத்தை எடுத்துள்ள டைரக்டர் சுந்தர்.சி., நேற்று இரவு 7 மணி அளவில் அப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சுந்தர்.சி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு :
* ஆடியோ விழாவுக்கு சினிமா பிரபலங்களை அழைக்காமல் நடத்துவது ஏன்?
என்னைப் பொறுத்தவரை விஐபிக்களை அழைத்துதான் ஆடியோ விழா நடத்த வேண்டும் என்ற செண்டிமென்டெல்லாம் பார்க்க மாட்டேன். அவர்கள் கலந்து கொள்வதினால் படம் ஓடும் என்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது. காரணம், படங்களைப் பற்றிய செய்தியை மக்களுக்கு கொண்டு செல்கிறவர்கள் பத்திரிகையாளர்கள். அதனால் அவர்கள் முன்பு ஆடியோ ரிலீஸ் செய்தாலே போதும் என்பதினால் தான் எனது படங்களின் ஆடியோ விழாவை மீடியாக்களை மட்டுமே நம்பி நடத்துகிறேன். அப்படி நான் நடத்திய படங்களை நீங்கள் மக்களிடையே கொண்டு சென்று என் படங்களை வெற்றி பெற வைத்து வருகிறீர்கள்.
* காமெடி, ஆக்சன் என்று படமெடுக்கும் நீங்கள் பேய் படமெடுக்க நினைத்தது ஏன்?
நான் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது அந்த சமயத்தில் காமெடி படங்கள் வரவில்லை. 5 வருடத்திற்கு முன்பு கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் வந்திருந்தது. அதனால் நான் காமெடி கதையில் அந்த படத்தை இயக்கினேன். படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் இப்போது தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு பிறகு எந்த மாதிரியான படம் இயக்கலாம் என்று யோசித்தபோது ஹரர் படம் எடுக்கும் எண்ணம் வந்தது.
காரணம், சநதிரமுகி, காஞ்சனா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதனால் பேய் கதையை மையப்படுத்தி ஒரு படம் எடுக்கலாம் என்றபோதுதான் இந்த அரண்மனை கதை உருவானது. அதுமட்டுமின்றி, என் வீட்டில் என் மனைவி, குழந்தைகள் அனைவருமே பேய் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். ஏதாவது பேய் படங்கள் வந்திருந்தால் தியேட்டருக்கு அழைத்து செல்ல வற்புறுத்துவார்கள். அப்படி செல்லும்போது படத்தை பயந்து கொண்டேதான் பார்ப்பார்கள். என்றாலும் அந்த படங்களை அவர்கள் அதிகமாகவே ரசித்தனர். அதன்பிறகுதான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்கூட பேய் படங்கள் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அதிக நம்பிக்கையுடன் இந்த படத்தை இயக்கினேன்.
* இந்த படத்திற்கான அரண்மனை நிஜமானதா இல்லை செட்டில் உருவானதா?
ஐதராபாத்தில் உள்ள ஒரு பழைய அரண்மனையைதான் முதலில் பார்த்தேன். ஆனால் அதை சரி செய்து படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் அந்த முயற்சியை விட்டு விட்டு, செட் அமைத்து படமாக்கினேன். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை 3 மாதத்தில் முடித்து விட்டபோதும், சிஜி ஒர்க்கிற்காக 8 மாதங்கள் ஆகி விட்டது. படத்தை பார்க்கும்போது பெரிய அளவில் சிஜி ஒர்க் செய்திருப்பது தெரியாது. ஆனால் நிறைய ஒர்க் நடந்தது. அதனால்தான் படம் பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும் மிரட்டலாகவும் அவுட்புட் வந்திருக்கிறது.
* நிஜத்தில் பேய் இருக்கிறதா?
இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா இருக்கு. மேலும், பேய் இல்லை என்று சொல்பவர்கள்கூட பேய்க்கு பயப்படுவார்கள். நான் இப்போதுகூட தனியாக தூங்க பயப்படுவேன். இருக்கோ இல்லையோ ஆனால் பேய்க்கு பயமாக உள்ளது என்றார் சுந்தர்.சி.,