ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ப்ரணிதா. மறந்தேன் மெய்மறந்தேன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். கத்திகப்பல், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00, இளம்புயல் படங்களில் நடித்தார். சினிமா அவருக்கு சரிப்பட்டு வரவில்லை டி.வி பக்கம் வந்துவிட்டார். கல்யாணி என்ற பெயரில் பீச் கேர்ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சில சீரியல்களிலும் நடித்தார்.
அதன் பின்னர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த கல்யாணி இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் பீச் கேர்ள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.
"பீச் கேர்ள் என் வாழ்வின் ஒரு அங்கம். புதிய நிகழ்ச்சிக்கான 20 எபிசோட்கள் படமாக்கப்பட்டு விட்டது. முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் தொடங்குமாறு ரசிகர்களும், விளம்பரதாரர்களும் வற்புறுத்த இப்போது மீண்டும் தொடங்கி விட்டோம். இந்த முறை என்னுடன் ரெபேக்காவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது" என்கிறார் கல்யாணி.