‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவர்களுக்கு கடிதம் எழுதி ஃபோட்டோ கேட்டு அதை மற்றவர்களிடம் காண்பித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மனம் கவர்ந்த நட்சத்திரங்களுக்கு ஃபோன் செய்து பேசினால் கூட அவர்களுடைய உதவியார்கள் மட்டுமே பேசுவார்கள். ஆனால் தற்போது நட்சத்திரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்துவிட்டன.
அதிலும் தங்கள் நட்சத்திரங்களை எங்காவது பார்த்தால் அவர்களுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் ஏற்றி அதிகமான 'லைக்' வாங்க வேண்டும் என்ற ஆவல் சராசரி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. பல நடிக, நடிகையரும் ரசிகர்களின் புகைப்படம் எடுக்கும் ஆவலை தடுப்பதில்லை. ஆனால், நடிகை டாப்ஸீக்கு ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்கிறார். “ சில ரசிகர்கள்தான் மிகவும் மரியாதையாக அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதே போல் என்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தவறான, ஆபாசமான டுவிட்டர்களைப் பதிவிடுபவர்களை தடை செய்துவிடுவேன். மேலும், என்னுடன் புகைப்படம் எடுக்கும் போது என் தோள் மீது கை போடுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அது போன்று செய்பவர்களைக் கண்டால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது, ” என்று தெரிவித்துள்ளார்.
அதனால், ரசிகர்களே இனி டாப்ஸீயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டால் பார்த்து எடுங்கள்...