டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆர்யா என்றாலே கோலிவுட்டின் ஜாலி பார்ட்டி நடிகர் என்றாகி விட்டது. தனக்கு சம்பந்தமே இல்லாத படங்களில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும தேடிப்பிடிதது சென்று நலம்குலம் விசாரித்து நட்பு வளர்ப்பார். சிலருக்கு தமிழ் தெரியாது என்றால், அதை பயன்படுத்தி அவர்களுக்கு தமிழ் ஆசான் ஆகிவிடுகிறார் இதை ஆர்யாவே சில மேடைகளில் கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஆர்யா தனது தம்பி சத்யாவுக்காக தற்போது அமரகாவியம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது, அண்ணனைப்பற்றி ரொம்ப உயர்வாக பேசினார் சத்யா. அதோடு, என் அண்ணன் ரொம்ப ஜெனூன் பெர்ஷன் என்றும் சொன்னார். அதைக்கேட்டு மேடையில் அமர்ந்திருந்த ஆர்யா சற்று ஜர்க் அடித்தார்.
அதோடு, எதிரில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அந்த வார்த்தையைக்கேட்டு சலசலப்பு ஏற்பட்டது. இதனால் தன்னை கிண்டலடித்துதான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார் ஆர்யா. அதையடுத்து, நடிகைகளுடன் நட்பு வளர்க்கும் விசயத்தில் உங்கள் அண்ணனுக்கு போட்டியாக வருவீர்களா? என்று சத்யாவை நோக்கி கேள்வி பறந்தபோது, சினிமாவில் நல்ல நடிகனாக வேண்டும் என்றால் மற்றவர்களிடமுள்ள நல்ல விசயங்களை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் என் அண்ணிடமும் நிறைய நல்ல விசயங்கள் உள்ளது. அதனால் அதை நான் பின்பற்றுவேன் என்றார் சத்யா. சத்யாவின் பேச்சு நடிகைகள் விசயத்தில் ஆர்யா ரூட்டில் நான் கிராஸ் ஆக மாட்டேன் என்பது போன்று இருந்தது.