கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள சலீம் வெளியாகி உள்ளது. அடுத்து அவர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான் ஆகிய படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருவதாலும் தானே ஹீரோவாகிவிட்டதாலும் இனி ஹீரோக்கள் படத்திற்கு இசை அமைப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் படம் ஹிட்டானதால் எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. அடுத்தும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நல்ல ஸ்கிரிப்டுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன். அதன் பிறகு அமைந்ததுதான் சலீம் ஸ்கிரிப்ட். அதை படமாக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. எனவே இரண்டு வருட இடைவெளி ஏற்பட்டது. இது அதிகமான கால அவகாசம் என்பதை உணர்கிறேன். அதனால் இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.
அடுத்தடுத்து படங்கள் கையில் இருப்பதால் இனி நடிப்பில் முழு கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். அதிக காலமும் உழைப்பும் தேவைப்படும் பெரிய ஹீரோக்கள் படத்திற்கு இனி இசை அமைக்க மாட்டேன். எனது படங்களுக்கு நான் இசை அமைத்தாலும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு தருவேன். பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார் விஜய் ஆண்டனி.