தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேற்று (ஆகஸ்ட் 29) விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கனிபாக்கத்தில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகர் சரண்ராஜ் வி.ஐ.பி தரிசன கேட் வழியாக சாமிகும்பிடச் சென்றார். அவர் மாலை அணிந்து காவிநிற வேட்டி சட்டை அணிந்திருந்தார். நடிகரை கண்டதும் உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்கள் அவரை படம் எடுத்து அதை உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பினர். அப்போது சரண்ராஜ் இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தது. கோவிலுக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்கிற விதிமுறையை சரண்ராஜ் மீறிவிட்டதாக உள்ளூர் மக்கள் புகார் கூறினார்கள்.
இதை கேள்விப்பட்ட சரண்ராஜ் கோவில் முன் கூடியிருந்த நிருபர்களிடம் "சென்னையிலிருந்து காரில் வந்து சாமி தரிசனம் செய்தேன். நான் எனது பாதுகாப்பிற்காக எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். சாமி கும்பிட செல்லும்போது துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் அவசரத்தில் மறந்து உடன் எடுத்துச் சென்று விட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து கனிபாக்கம் போலீசார் கூறியதாவது: நடிகர் சரண்ராஜ் கோவிலுக்குள் துப்பாக்கி கொண்டு சென்றது தவறுதான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். உரிமம் பெற்ற துப்பாக்கி என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறார். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவதாக கூறியிருக்கிறார். அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வில்லை. என்றார்கள்.