இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கோச்சடையான் படத்தையும் தயாரித்தது இந்த நிறுவனம்தான். தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகி இருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். தென்னிந்திய தலைவர் என்பதோடு. டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கிரியேட்டிவ் இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரி ஜோதி தேஷ்பாண்டே "சவுந்தர்யாவை எங்கள் நிறுவனத்துக்கு வரவேற்கிறோம். அவரது திறமையும் உழைப்பும் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். ஈராஸ் டிடிஎச், ஐபிடிவி, பிராண்பேண்ட் போன்றவற்றில் களம் இறங்குகிறது. அவற்றை திறம்பட சவுந்தர்யா வழிநடத்துவார்" என்கிறார்.
"ஈராஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டிஜிட்டல் மற்றும் படைப்பாற்றல் செயல்முறைகளில் ஈராஸை மேம்படுத்ததுவேன். தொழில்நுட்பம், டிஜிட்டல் வாய்ப்புகளை ரசிகர்களின் தேவை அறிந்து பயன்படுத்துவேன். ஈராஸ் தயாரிப்பில் வரிசையாக படங்கள் வெளிவர இருக்கிறது. அவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு உரிய பங்கு இருக்கும்" என்கிறார் சவுந்தர்யா.