'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டு வழக்கம் போல மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பலவிதமான கமெண்ட்டுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒரே விதமான இரண்டு சர்ச்சைகளால் 'லிங்கா' படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட விஷயங்களை அக்குழு தொடர்ந்து கவனித்து சரி செய்ய வேண்டும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
'லிங்கா' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற போது, அங்குள்ள அஞ்சப்பூர் என்ற ஊரில் ஏரியில் கெமிக்கல்களை கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கநமக்கி அணையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது பிளாஸ்டிக், உட்பட பலக் கழிவுகளை அணைப் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றதாக படப்பிடிப்புக் குழு மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து இரண்டு இடங்களில் ஒரே விதமான சுற்றுச்சூழலைக் கெடுக்கும் விதத்தில் படப்பிடிப்புக் குழுவினர் நடந்து கொண்டது அப்பகுதி மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.
'லிங்கா' படத்தின் கதையே மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் போது அந்தப் படத்தின் குழுவினரே மக்களைப் பிரச்சனைக்குள்ளாக்குவது சரியா என ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இனியாவது அவர்கள் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவார்களா என்ற சந்தேகமும் அவர்களிடம் எழுந்துள்ளது. இதற்கு படப்பிடிப்புக் குழு என்ன பதில் சொல்லப் போகிறது.