பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சினிமாவை ஒழுங்காக இயக்குவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் ராம்கோபால் வர்மா பார்ப்பார் போலிருக்கிறது. இந்து மக்கள் தெய்வ பக்தியுடன் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியைப் பற்றி கிண்டலடிக்கும் விதத்தில் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவைப் போட்டு இந்து மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். இது சம்பந்தமாக அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அவருடைய பதிவில், “விநாயகரின் சகோதரரான முருகன் செய்யாததை விநாயகர் செய்ததால்தான் அவர் கடவுளானாரா. விநாயகரைப் போல் முருகன் தலையை வெட்டுப்படவில்லை என்பதுதான் காரணமா. இன்று விநாயகர் உண்மையாகவே பிறந்தாரா அல்லது அவருடைய அப்பாவால் தலை இன்று வெட்டப்பட்ட நாளா என்பதை யாராவது எனக்கு சொல்வீர்களா ?. விநாயகர் அவருடைய கைகளால் சாப்பிடுவாரா அல்லது தும்பிக்கையால் சாப்பிடுவாரா ?. அவரை வேண்டுபவர்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளார் என்பதை விநாயக பக்தர்கள் எனக்கு சொல்வார்களா. தன்னுடைய தலையையே காப்பாற்றிக் கொள்ளாதவர், மற்றவர்களின் தலையை எப்படிக் காப்பாற்றுவார் ?.
மற்ற கடவுளை விட விநாயகர் அதிகம் சாப்பிடுவாரா. ஏனென்றால் மற்ற கடவுள்கள் எல்லாம் நேர்த்தியாகவும், வலிமையாகவும் இருக்கிறார்கள். விநாயகருக்கு சிறு வயதிலேயே தொப்பை வந்துவிட்டதா, அல்லது யானையின் தலையை வைத்த பிறகு வந்ததா?. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்த ஆகஸ்ட் 29ம்நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள். 30ம் தேதி முதல் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கட்டும்.
இப்படி நான் கேட்பது அனைத்துமே என்னுடைய அப்பாவித்தனத்தாலும், அறியாமையால் மட்டும்தான். விநாயகரைப் பற்றிய என்னுடைய கேள்விகளை நிபுணர்கள் தீர்த்து வைப்பார்கள் என நினைக்கிறேன். என்னுடைய படங்கள் தோல்வியடைவது கூட கடவுள் மீதான என்னுடைய அணுகுமுறை என்றுதான் நினைக்கிறேன். நானும் சிறந்த பக்தனாக வர ஆசைப்படுகிறேன். மதமும், குடியும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த போதைகள் என பிரடெரிக் நீட்சே சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
சொன்னதையெல்லாம் சொல்லிவிட்டு பின்னர் வழக்கம் போல மன்னிப்பு கேட்டிருக்கிறார் ராம்கோபால் வர்மா. “விநாயகரைப் பற்றிய என்னுடைய டுவிட்டுகள் நான் வழக்கமாகப் பதிவிடுவது போலத்தான், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போடவில்லை. அப்படி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.
அவரின் இப்படிப்பட்ட விநாயகரைப் பற்றிய பதிவு இந்து மக்களை மிகவும் புண்படுத்துவது என பாரதீய ஜனதா கட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.