ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹீரோவாக நடித்து ஆட்டமிழந்த வடிவேலு, கருணாஸ் வரிசையில் இப்போது சந்தானமும் சேர்ந்து விட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தனது மார்க்கெட்டை எக்கச்சக்கமாக உயர்த்தப்போகிறது என்று ஹீரோ வேஷம் போட்ட சந்தானத்தை அப்படம் சறுக்கி விட்டது. அதனால் அதையடுத்து அவருக்காக கதை பண்ணி வைத்திருந்த டைரக்டர்களும் சரி, அவரை வைத்து படம் தயாரிக்கயிருந்த படஅதிபர்களும் சரி பின்வாங்கி விட்டனர்.
இதனால் ஹீரோ சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காமெடி வேடங்களை விரட்டி விட்டுக்கொண்டிருந்த சந்தானம்,. தன்னை ஹீரோவாக வைத்து யாரும் படம் பண்ண முன்வரவில்லை என்றதும் பலத்த அதிர்ச்சியடைந்தார். ஆனபோதும், ரஜினியின் லிங்கா, உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா, சேதுவின் வாலிப ராஜா உள்பட சில படங்கள் கைவசம் இருந்ததால், இந்த படங்களில நடிக்கும்போதே புதிய படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்று சில நெருக்கமான சினிமாக்காரர்களை அணுகி சான்ஸ் கேட்டார்.
ஆனால், யாரும் அதை காதில் வாங்கிககொள்ளவிலலை. இதனால் காலக்கொடுமையை நினைத்து சந்தானம் புலம்பிக்கொண்டிருந்த வேளையில், இப்போது நண்பேன்டா படத்தையடுத்து தான் நடிக்கும் படத்திலும் சந்தானத்துக்கு சான்ஸ் தருவதாக ஏற்கனவே கூறியிருந்த உதயநிதி ஸ்டாலினும் அடுத்த படத்தில் காமெடியனை மாற்றப்போவதாக கூறி விட்டாராம்.
இதுதான் சந்தானத்துக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். காரணம், உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல் படங்களை அடுத்து இப்போது நடித்து வரும நண்பேன்டா படங்கள் வரை உதயநிதிக்கு இணையான வேடத்தில் சந்தானமும் நடித்திருக்கிறார். அந்த வகையில், ஆரம்பத்தில் உதயநிதியை தாங்கிப்பிடித்தவரே சந்தானம்தான்.
இருப்பினும், இப்போது சந்தானத்தின் மார்க்கெட் இறங்குமுகத்தில் இருக்கும்போது எதற்காக ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் இருககிறாராம் சந்தானம்.