ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் அந்த படங்கள் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பதே இல்லை. இப்படி நயன்தாரா தொடர்ந்து அலட்சியம் காட்டியதால்தான் அனாமிகா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள மறுத்த அவருக்கு, தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
அதனால் இப்போது தமிழை தவிர வேறு கதியே இல்லாமல் இருக்கிறார். இங்குள்ள மூன்றாம்தட்டு நடிகர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.
இந்த நிலையில், அவ்வப்போது தனது படங்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் த்ரிஷா, பல சமயங்களில் டேக்கா கொடுத்தும் வருபவர். அப்படிப்பட்ட த்ரிஷா, தமிழ், தெலுங்கு படங்களுக்கு டேக்கா கொடுப்பது போன்று கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடித்து வந்த பவர் படத்தின் ஆடியோ விழாவையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.
ஆனால், அதையடுத்து, அங்கிருந்து அவருக்கு கண்டன குரல்கள் அணிவகுத்தன. இதனால் ஆடிப்போய் விட்டார் த்ரிஷா. எக்குத்தப்பாக பேசினால் அடுத்து தனக்கும் நயன்தாராவுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்பதால், உடனடியாக பெங்களூர் விரைந்து சென்று, சம்பந்தப்பட்ட படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டவர், மீடியாக்களை அழைத்தும் தான் வேறு படத்தின் படப்பிடிப்பில இருந்ததால்தான் கலந்து கொள்ள முடியவிலலை என்றும் தனது நிலையை விளக்கி விட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.