வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
மங்காத்தா, ஆரம்பம் படங்களில் நடித்தபோது சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் நடித்த அஜீத் சில விபத்துக்களையும் சந்தித்தார். ஆனபோதும், அவர் ரிஸ்க் எடுப்பதை விடவில்லை. என்னால் முடிந்தவரை நானே நடிக்கிறேன். முடியாதபட்சத்தில் டூப் நடிகரை பயன்படுத்தலாம் என்று சொல்லி வம்படியாக ரிஸ்க் எடுப்பதை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில். தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் ரயில் சண்டை காட்சியில் நடித்தபோது, ஓடும் ரயிலில் ஓடிக்கொண்டே ஏறுவது. ரயில் பெட்டியின் மேல் நின்று சண்டை செய்வது போன்ற காட்சிகளில் தானே துணிச்சலாக நடித்துள்ளார்.
அதோடு, ஒரு காட்சியில் 120 அடி உயரத்தில் இருந்து கயிற்றில் கீழே இறங்குவது போன்று நடிப்பதற்கு அஜீத் நடிக்க வந்தபோது, இந்த ரிஸ்க்கெல்லாம் வேண்டாம். ஏதாவது பிரச்சினையாகி விடும் என்று தடுத்தாராம் இயக்குனர் கெளதம்மேனன். ஆனால், அஜீத்தோ, பைக் ரேஸ் எவ்வளவு ரிஸ்க்கானது அதையே நான் விளையாட்டாக செய்பவன். எனக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று தானே கயிற்றில் இறங்கி வருவது போல் நடித்தாராம்.
ஆனால், அஜீத் தைரியமாக இறங்கினாலும் 120 அடி உயரமான பில்டிங்கில் இருந்து அவர் கீழே இறங்கி வருவது வரை அனைவரும் பயந்துடனேயே இருந்தார்களாம்.