கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
அஸ்வின் கிட்வானி புரோடெக்ஷன்ஸ் சார்பில் மும்பை நாடக கலைஞர்கள் பிளேம் இட் ஆன் யாஸ்ராஜ் என்ற ஆங்கில நாடகத்தை சமீபத்தில் மும்பையில் அரங்கேற்றினர். இது இந்நிறுவனத்தின் 50வது மேடை நாடகம் ஆகும். மிகுந்த உற்சாகத்துடன் நாடக கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாடகம் குறித்து அஸ்வின் கிட்வானி கூறுகையில், இந்த நாடகத்தின் டைரக்டர் பரத் தபோல்கருக்கு யாசுடன் நல்ல உறவு உண்டு. பரத்திடம் இருந்து இந்த கதையை முதன் முதலில் கேட்ட போது யாஸ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இந்த நாடகத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் வரமுடியாமல் போனதால் தற்போது அவரது நல்லாசிகளுடன் இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளோம். இந்த நாடகத்திற்கு அவரது பெயரை பயன்படுத்த அவர் அனுமதி அளித்தது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலில் யாஸ்ராஜ் என்றோ இந்த நாடகத்திற்கு பெயரிட்டோம். பின்னர் அது பிளேம் இட் ஆன் யாஸ்ராஜ் என கதைக்கு ஏற்றபடி மாற்றப்பட்டது என்றார்.
நாடகத்தின் டைரக்டர் பரத் கூறுகையில், பாலிவுட்டில் நடைபெறும் திருமணங்களை மையப்படுத்தி இந்த நாடகத்தை அமைத்துள்ளோம். இந்தியர்கள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக, ஒரு வார திருவிழாவாக நடத்தப்பட்ட திருமணங்கள் தற்போது மிகவும் சுருங்கி உள்ளது பற்றி நான் படித்த கட்டுரையை கொண்டு இந்த நாடகத்தை அமைத்துள்ளேன். பாலிவுட்டிற்கு யாஸ்ராஜ் அளித்துள்ள பங்களிப்பை நினைவுபடுத்துவதற்காக அவரை கவுரவிக்கும் விதமாகவே இந்த நாடகத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது என்றார்.