Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலுக்கு வருவது பற்றி... பிறந்தநாளில் விஷால் பரபரப்பு பேட்டி!!

29 ஆக, 2014 - 17:12 IST
எழுத்தின் அளவு:

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷால். தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த விஷால், தற்போது ஹரி இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் உடன் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் முனைப்போடு ரெடியாகி வருகிறது.


இந்நிலையில் நடிகர் விஷால் இன்று(ஆகஸ்ட் 29ம் தேதி) தனது 37வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில், சென்னையில் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார். கூடவே தான் புதிதாக தொடங்கிய வி மியூசிக் ஆடியோ கம்பெனியையும் முறைப்படி இன்று துவக்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் படத்தை பார்த்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் எதேச்சையாக நடிகனாகிவிட்டேன். என் அப்பா-அம்மா, கல்லூரி முதல்வர் ஆகியோரை பார்த்து ரொம்ப பயப்படுவேன். அதற்கு அடுத்து நான் அதிகம் பயப்படுவது பத்திரிகையாளர்களை பார்த்து தான். சினிமாவில் நான் நன்றாக நடித்தால் அதை பாராட்டுவீர்கள், அதே நான் சரியாக நடிக்கவில்லை என்றால் அதையும் சுட்டி காண்பித்தவர்கள் நீங்கள் தான். இன்று நான் இவ்வளவு வளர்ந்ததற்கு நீங்களும் முக்கிய காரணம்.


தற்போது பூஜை படத்தில் நடித்து வருகிறேன். தாமிரபரணி படத்திற்கு பிறகு மீண்டும் ஹரி சாரின் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படத்திற்காக நிறைய உழைத்து வருகிறோம். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும்தான் பாக்கி உள்ளது. படத்தை உறுதியாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இதற்கு அடுத்தப்படியாக மீண்டும் சுசீந்திரன் படத்திலும், அதற்கு அடுத்த நேரடியாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன்.


கையில் பணமே இல்லாமல் விஷால் பிலிம் பேக்டரியை ஆரம்பித்தேன். தற்போது கொஞ்சம் பணத்தை வைத்து கொண்டு நல்ல படங்களை எடுத்து வருகிறேன். அதேப்போல் தான் தற்போது புதிதாக வி மியூசிக் கம்பெனியையும் ஆரம்பித்துள்ளேன். என் சகோதரி ஐஸ்வர்யா தான் இந்த ஆடியோ கம்பெனியை நிர்வகிப்பார். என் படங்கள் மட்டுமல்லாது, மற்றவர்களது படங்களின் ஆடியோவையும் எங்களது ஆடியோ கம்பெனியில் ரிலீஸ் செய்வோம்.


என் உயிரையும் தருவேன்


திருட்டு விசிடி.,யை தனி ஆளாக நின்று ஒழிக்க முடியாது. ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்று திரள வேண்டும். திருட்டு விசிடியை நாமும் ஒரு வகையில் வளர்த்துவிட்டோம். இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இதை ஒழிக்க வேண்டும். அதற்கு ரஜினி சார், விஜய் சார் போன்றோரும் குரல் கொடுக்க வேண்டும். திருட்டு விசிடியை ஒழிக்க நான் என் உயிரையும் கொடுப்பேன்.


அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பேன்


எங்க அப்பா என்னிடம் அடிக்கடி, சினிமாவில் மட்டும் அநியாயத்தை தட்டி கேட்டால் போதாது, நிஜத்திலும் தட்டி கேட்க வேண்டும் என்பார். அப்படி தான் நானும் இருக்கிறேன். தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கத்திற்கு கட்டடம் இருப்பதை போன்று நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட வேண்டும். அதை கட்டி முடிக்கும் வரை ஓய மாட்டேன். எம்ஜிஆர்., சிவாஜி போன்றோர் நாடகத்தில் நடித்து இந்த சங்கத்தை உருவாக்கினார்கள். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் இரண்டு முறை தான் நடிகர் சங்க பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளேன். நான் நடிகர் சங்கத்தில் இருக்கும் யாருக்கும் எதிரி கிடையாது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டி முடிக்கணும். அது தான் என் குறிக்கோள் அது வரை நான் ஓய மாட்டேன். மேலும் அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பேன்.


அரசியலுக்கு வரும் எண்ணமில்லை


நடிகர் சங்க பொதுக்குழுவில் நான் பேசியதை பார்த்து திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியதாக பத்திரிகைகளில் செய்தி படித்தேன். அதைப்பார்த்து நான் அரசியலுக்கு வருவதாக பலர் சொல்கிறார்கள். நான் அரசியலில் குதிக்கவோ, அடுத்த கட்டத்திற்கு போகவோ எண்ணவில்லை. அரசியல் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் கல்லூரிக்கு சென்று பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கணும். இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது. நல்லதை அரசியலில் இருந்து தான் செய்யணும் என்று இல்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். ஏதோ என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.


2015 வரை திருமணம் கிடையாது


பூஜை படத்திற்கு பிறகு சுந்தர்.சியின் ஆம்பள, அடுத்து மீண்டும் சுசீந்திரன் இயக்கம், பிறகு தெலுங்கில் ஒரு படம் பண்ண வேண்டியுள்ளது. இப்படி கைநிறைய படங்கள் இருப்பதால் 2015ம் ஆண்டு வரை நான் ரொம்ப பிஸி, அதனால் இப்போதைக்கு திருமணமும் கிடையாது.


இவ்வாறு விஷால் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in