பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை, கோடம்பாக்கத்தில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா காலை 11மணிக்கு துவங்கியது. சொன்னபடி நடிகர் சிவகார்த்திகேயன் நேரம் தவறாமல் 11மணிக்கு வந்தார். பின்னர் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் செலவிட்டு சுண்டல், பொரி உள்ளிட்ட விநாயகருக்கு படைக்கப்பட்ட படையல்களை தானும் உண்டு மகிழ்ந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சிறப்பு வாய்ந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நானும் பங்கேற்றது சந்தோஷம். தற்போது டாணா படத்தில் நடித்து வருகிறேன். அதனைத்தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் டீமோடு இணைந்து தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன். ரசிகர்கள் விரும்பும்படியான நிறைய படங்களை நான் கொடுக்க ஆசைப்படுகிறேன். நான் இங்கு இவ்வளவு தூரம் வந்ததற்காக ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.