கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சென்னை, கோடம்பாக்கத்தில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா காலை 11மணிக்கு துவங்கியது. சொன்னபடி நடிகர் சிவகார்த்திகேயன் நேரம் தவறாமல் 11மணிக்கு வந்தார். பின்னர் அங்கு நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் செலவிட்டு சுண்டல், பொரி உள்ளிட்ட விநாயகருக்கு படைக்கப்பட்ட படையல்களை தானும் உண்டு மகிழ்ந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சிறப்பு வாய்ந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நானும் பங்கேற்றது சந்தோஷம். தற்போது டாணா படத்தில் நடித்து வருகிறேன். அதனைத்தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் டீமோடு இணைந்து தனுஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன். ரசிகர்கள் விரும்பும்படியான நிறைய படங்களை நான் கொடுக்க ஆசைப்படுகிறேன். நான் இங்கு இவ்வளவு தூரம் வந்ததற்காக ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.