கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சுசீந்திரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'பாண்டிய நாடு' திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் தற்போது விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் விஷால் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம் சுசீந்திரன். விஜய், அஜித்தையெல்லாம் இயக்க மாட்டீர்களா எனக் கேட்டால் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களும் சரியென்றுதான் சொன்னார்கள் என்கிறார் சுசீந்திரன்.
அவர் மேலும் கூறுகையில், “அப்படி அவங்களை மாதிரி பெரிய ஸ்டாரோட படம் பண்ணும் போது சாதாரணமான ஸ்கிரிப்டா இல்லாம ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். நான் இதுவரைக்கும் கதையைத் தயார் செய்துட்டுதான் அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்வேன். ஹீரோவுக்குன்னு கதை தயார் பண்ணணும்னா அதுக்குன்னு தனியா ஒர்க் பண்ணணும். முதல் முறையாக ஒரு ஹீரோவுக்காக கதை பண்ணப் போறேன். அப்படி நான் பண்ற படம் விஷாலுக்கு. 'பாண்டிய நாடு' படத்துக்கு முன்னாடி நான் ஃபெயிலியர் கொடுத்திருந்தாலும் என்னை நம்பி அட்வான்ஸ் கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்காக ரொம்ப மெனக்கெட்டு ஒரு கதை பண்ணப் போகிறேன், ” என்கிறார் சுசீந்திரன்.