பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்து சர்ரென உச்சத்திற்குப் போனார். 'தென் மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். ஏறக்குறைய இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவா நடித்து விட்டார். இன்றைய தேதியில் அம்மா கதாபாத்திரத்தில் இவரை விட்டால் மிஞ்ச யாருமேயில்லை.
நாயகியாக நடித்ததை விட தற்போது ரொம்பவே பிஸியாக இருக்கிறார் சரண்யா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்னும் நடிக்காத நடிகர்களைப் பற்றி அவர் பேசினார். அப்போது “நான் ரஜினிகாந்துடனும், மோகன்லாலுடனும் ஜோடியாக நடிப்பேனே தவிர அவர்களுக்கு அம்மாவாக நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னுடைய அம்மா தீவிரமான கமல் ரசிகை. நான் சின்னப் பெண்ணாக இருந்த போது சினிமாவுக்குப் போக வேண்டுமென்றால் கூட கமல் படத்திற்குத்தான் முதலில் கூட்டிச் செல்வார். அப்புறம்தான் ரஜினி படத்திற்கே கூட்டிச் செல்வார். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ” என்றார்.
தீவிர ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்...!