'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சைவம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் விஜய். விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பாக கொச்சிக்கு சென்றுள்ளார் இயக்குநர் விஜய். அவருடன் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பாலும் கொச்சி சென்றுள்ளார்.
அமலா பாலின் சொந்த ஊரான ஆலுவா கொச்சி அருகேதான் உள்ளதாம்! அமலா பால் நடிகையாகி பிரபலமான பிறகு அந்த ஊரில் இருக்கும் அரசாங்க பொது மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அடுத்த மாதம் 7-ஆம் தேதி கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிறது. ஆலுவாவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளனர் விஜய் - அமலா பால்! இதற்காக அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, கனிகள் அடங்கிய பரிசுப்பையுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக பணமும் வழங்கவிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி ஆலுவா மருத்துவமனையில் நாளை நடைபெறவிருக்கிறது. இதற்காகவே கணவருடன் கேரளா சென்றுள்ளாராம் அமலாபால். கடந்த சில மாதங்களுக்கு நடைபெற்ற தனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டும் அந்த மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு அமலாபால் நிதி உதவிகளை செய்திருந்தராம்!